சிரேஷ்ட ஊடகவியலாளர் பி . மாணிக்கவாசகம் மறைவு: தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு!

Date:

தமிழ் ஊடகத்துறையில் சுமார் 4 தசாப்தங்களுக்கு மேலாக கொடிகட்டிப் பறந்த ஒரு சிறந்த ஊடகவியலாளர் பி . மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.

வடக்கில் போர் நடந்த காலப்பகுதியில் நெருக்கடியான சூழலில் இருந்து செய்திகளை தேடி எடுத்து அதிகாரவர்க்கம் மறைக்க முற்பட்ட தகவல்களைக் கூட மிகவும் தைரியமாக நின்று வெளிப்படுத்துவதில் அதி திறமைசாலியாக செயல்பட்ட ஒருவராவார்.

அவரது ஊடக பங்களிப்பு தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரமன்றி சிங்களம் , ஆங்கிலம் போன்ற ஊடகங்களுக்கும் மிகவும் அவசியமானதாக இருந்து வந்தது.

அதுமட்டுமல்லாமல் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு வடக்கு, கிழக்கில் நடத்திய பல ஊடக பயிற்சி செயலமர்வுகளுக்கு இணைப்பாளராகவும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடததக்கதாகும்.

அன்னாரது மறைவுக்கு நியூஸ் நவ் ஊடகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...