சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் பத்திரமாக மீட்பு: சவூதி அரசுக்கு அலி சப்ரி நன்றி

Date:

உள்நாட்டு போர் இடம்பெற்று வரும் சூடானில் இருந்து இலங்கை பிரஜைகளின் முதல் குழு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார்.

இந்த குழுவை சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கு வெளியேற்றியதாகவும், ஜித்தாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் பதில் துணைத் தூதரகத்தால் வரவேற்கப்பட்டதாகவும் அமைச்சர் சப்ரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சூடானில் இருந்து இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு வசதியளித்த சவூதி அரேபிய இராச்சியத்திற்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15 அன்று சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே நடந்த சண்டையில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த வெளியேற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சூடானில் இருந்து தனது குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் இலங்கை தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் இருந்து இலங்கையர்களை பாதுகாப்பான வெளியேற்றத்தை அடுத்த சில நாட்களில் அடைய முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...