சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

Date:

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

சவூதி அரேபிய அரசாங்கம் போர்ட் சூடான் நகரில் உள்ள சிறப்பு பாதுகாப்பான ஹோட்டலில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் அந்த இடத்திற்கு வந்து சூடானில் இருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்.

இதேவேளை, சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு நேற்று (26) தெரிவித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...