பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Date:

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சமூகத்துடனான விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், நிபுணர்கள் குழுவின் ஊடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பொருத்தமற்ற சரத்துக்களை நீக்குமாறு கடிதத்தின் மூலம் பிரதம பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பௌத்த பீடங்களின் பிரதம பீடாதிபதி உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதன் பரந்த வரையறையை எடுத்துரைத்துள்ளார், இதன்படி அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் பதவியில் உள்ள அரசாங்கத்தின் குறைபாடுகள் பற்றி பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போதைய நிலையில் சட்டமூலத்தை நிறைவேற்றுவது இலங்கைக்கு பாதகமாக அமையும் எனவும் எனவே நிபுணர் குழுவொன்றின் உள்ளீடுகளை பெற்று சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...