பல உணவுப் பொருட்களின் இறக்குமதித் தடையை நீக்கக் கோரிக்கை

Date:

இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பல உணவுப் பொருட்களுக்கான தடையை நீக்குமாறு வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களுக்கு அதிகம் தேவைப்படும் சிவப்பு சீனி, பச்சைப்பயறு, உழுந்து மஞ்சள், குரக்கன் போன்ற உணவுப் பொருட்களுக்கான தடையை நீக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விவசாயிகளை பலப்படுத்தும் வகையில், கடந்த பருவத்தில் இந்த உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு அந்த உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கி வரி விதிக்க வேண்டும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் அது தொடர்பான உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் கறுப்பு மாஃபியாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...