பலஸ்தீன ஆயுதப்படைகள் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் விமானங்கள்!

Date:

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் பொலிஸ் சோதனைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்கள் கட்டுப்பாட்டை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை லெபனான் மற்றும் காசாவில் குண்டுமழை பொழியத் தொடங்கியன.

இதனால் இஸ்ரேல் பலஸ்தீன ராணுவங்களுக்கு இடையே கடுமையான சண்டை மூண்டது.

ஒரு நாள் முன்பாக ஜெரூசலேமில் மசூதி ஒன்றில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில் லெபனான் தலைநகரில் இருந்து இயங்கும் பலஸ்தீன ஆயுதப்படைகள் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் வீச்சு நடத்தின.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் உள்ள பலஸ்தீன ஆயுதப்படைகள் மீது குண்டுவீசின.

நமது எதிரிகள் நம்மை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு காணொளி உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...