பள்ளிவாசல்கள், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Date:

பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அதிகளவான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பண்டிகையை வார இறுதியில் கொண்டாடவுள்ளார்கள்.

இதேவேளை, நோன்புப் பெருநாள் குறித்து தீர்மானிக்க கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று மாலை கூடவுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...