அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி: பராளுமன்றில் மௌன அஞ்சலி

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதையிட்டு இன்று பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு இணக்கம் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஒரு நிமிடம் இந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2022 மே 09 ஆம் திகதி மாலை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிட்டம்புவவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை சுற்றிவளைத்த குழுவொன்று, அவரை வாகனத்திலிருந்து இறக்கி துரத்திச்சென்று சுட்டுக்கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...