அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி: பராளுமன்றில் மௌன அஞ்சலி

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதையிட்டு இன்று பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு இணக்கம் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஒரு நிமிடம் இந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2022 மே 09 ஆம் திகதி மாலை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிட்டம்புவவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை சுற்றிவளைத்த குழுவொன்று, அவரை வாகனத்திலிருந்து இறக்கி துரத்திச்சென்று சுட்டுக்கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...