கம்பஹா மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்!

Date:

கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்  நிலவுவதாக கம்பஹா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திற்குள் பாரியளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கம்பஹா மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை 36911 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இம் மாதத்தில் 7203 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 22 வீதமான நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 20 வீதமான நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் இந்திக வீரசிங்க கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர், பாடசாலை மாணவர்கள் என வைத்திய நிபுணர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...