ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதன்படி சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் போட்டியின் கிண்ணத்தை வென்றுள்ளது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த அணி சார்பில் சாய் சுதர்சன் 58 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பெற்றார்.
நேற்றைய போட்டியில் சென்னை அணி சார்பாக தனது இன்னிங்ஸை நிறைவு செய்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதில் இன்னிங்ஸ் விளையாட சென்னை அணி களம் இறங்கியபோது, மழையால் ஆட்டம் தடைபட்டது.
டக்வொர்த் லூயிஸ் கோட்பாட்டின் படி சென்னை அணிக்கு 15 ஓவரில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதில் இன்னிங்சை விளையாடிய சென்னை அணி விறுவிறுப்பான ஆட்டத்திற்குப் பிறகு 15 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
சென்னையின் அனைத்து நம்பிக்கைகளையும் தன் மீது சுமந்த ஜடேஜா, கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து குஜராத் அணிக்கு ஏற்கனவே இருந்த வெற்றியின் அலையை மாற்றினார்.