ட்விட்டரின் CEO பதவியில் இருந்து விலகும் எலான் மாஸ்க்!

Date:

விரைவில் டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்தும் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என, அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மாஸ்க் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆறு வாரங்களில் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என எலான் மாஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் கூறியுள்ளார்.

புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயற்படவுள்ளதாகவும் மாஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மாஸ்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து டெஸ்லாவின் பங்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய தலைமை செயல் அதிகாரி யார் என்பதை மாஸ்க் வெளிப்படுத்தவில்லை.

எலான் மாஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு கடந்த ஆண்டு கையப்படுத்தியிருந்தார்.

அதன் பின்னர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் ஏற்படுத்தியிருந்தார்.

குறிப்பாக அப்போதைய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்டவர்களை பணியில் இருந்து நீக்கியிருந்தார்.

இதனிடையே, டுவிட்டர் நிறுவனத்திற்கு பெண் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரை நியமித்தால் அது வழக்கமான தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து ஒரு பெரிய விலகலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...