திருமலை சண்முகா கல்லூரி ஆசிரியர் ஆடை விவகாரம்: நீதியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

Date:

ஆசிரியரின் கலாசார ஆடையான ஹபாயா விவகாரத்தை முன்னிட்டு இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களுடைய அடிப்படை உரிமைக்காகவும் ஆடை சுதந்திரத்திற்காகவும் நீதிமன்றத்தில் 05 வருடங்களாக விவாதித்து வழக்கை வென்று தந்த குரல் என்ற அமைப்பின் சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தது.

இந்நத விடயம் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமா அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

திருகோணமலை சண்முகா ஆசிரியர் அபாயா ஆடை விவகாரம் தொடர்பில்குரல் கொடுத்தஇ முயற்சிகள் செய்த, அல்லாஹு தஆலாவிடத்தில் குறித்த ஆசிரியைக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காகவும் இருகரம் ஏந்திய அனைவருக்கும் ஈருலகத்திலும் நலவுகளை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வதாகவும் உலமா சபை தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் விடயத்தில் நீதிமன்றம் நாட்டின் யாப்பின் அடிப்படையிலும் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் பிரஜைகளுடைய அடிப்படை மத உரிமைகளை கவனத்தில் கொண்டும் நியாயமான, நீதமான ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது எமது நாட்டின் நீதித்துறையின் நேர்மையையும் சுயாதீனத்தையும் எடுத்துக்காட்டுவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சுட்டிக்காட்டியுள்ளது.

 

Popular

More like this
Related

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் 2026 செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் 16...

களுத்துறை பாலந்த நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க நிகழ்ச்சி: அரசு அதிகாரிகளுக்கு இஸ்லாம் குறித்த தெளிவுபடுத்தல்!

நிதா அறக்கட்டளை நிறுவனத்தினால்  "மொபைல் இணைவாழ்வு திட்டத்தின்" (Mobile Coexistence Project)...

அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் வளர்ச்சிக்கு புதிய ஆலோசனை சபை.

கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட...