நாடுமுழுவதும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட நடவடிக்கைகள்!

Date:

எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடு முழுவதும் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் ஒருகட்டமாக ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட செயற்திட்டங்கள், குற்றவாளிகள், சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான சோதனைகள் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான விசேட சுற்றுநிரூபம் பொலிஸ்மா அதிபரால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதும் அதன் ஒருகட்டமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை என்ற பேரில் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்களை அடக்கும் முயற்சியொன்று முன்னெடுக்கப்படக்கூடும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri...

தனது இரண்டாவது மின்சார ஸ்கூட்டரான Rizta வை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Ather Energy

ஸ்ரீ லங்கா மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் இந்தியாவின் முன்னணி மின்சார...

வடக்கு, கிழக்கு, வடமத்திய பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

நாடு முழுவதும் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை நிலைகொண்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...