நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

Date:

இலங்கையிலிருந்து 500 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எனவும் தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் 86 நோயாளர்களும், கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 48 நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 36 நோயாளர்களும், ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு, கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 218 நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஏனைய 21 மாவட்டங்களில் இருந்து 282 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தொழுநோயைக் குணப்படுத்துவதற்கு மிகவும் வெற்றிகரமான மருத்துவ முறைகள் இருந்தும், சமூகத்தில் இன்னும் நிலவும் தவறான எண்ணங்களால், பல நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை கிளினிக்குகளுக்குச் செல்லாமல் தங்கள் நிலையை மோசமாக்கியுள்ளனர்.

இந்த நோய்க்கு முறையான சிகிச்சை அளித்தால், ஆறு மாதங்களுக்குள் குணமாகி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல...

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...