நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும்!

Date:

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட பாரிய பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகளுக்காக மின்பிறப்பாக்கி மூடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏனைய அனல் மின் நிலையங்களுடன் மின் உற்பத்தி நிர்வகிக்கப்படும்.

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கான 30ஆவது கப்பல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, தற்போது இலங்கை மின்சார சபையின் நிலக்கரி தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மின்சார சபை தொழிற்சங்கங்கள் மற்றும் சில ஊடகங்கள் முன்னர் ஊகித்ததைப் போன்று மின்தடைகள் ஏற்படாது என அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...