புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி!

Date:

வெயங்கொட, வந்துராவ பகுதியில் இரண்டு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.

அதே பகுதியில் வசித்து வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

புகையிரத பாதையில் பயணித்த போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் குறித்த இளைஞர்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு இளைஞர்களும் தங்களது தொலைபேசிகளை பயன்படுத்திய நிலையில் புகையிரத பாதையில் பயணித்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...