வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சியை உண்ண வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Date:

வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதால், வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாணத்தில் கால்நடைகளுக்கு “லம்பி ஸ்கின் நோய்” எனப்படும் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்திற்கு கால்நடைகளை கொண்டு செல்வதையும், அங்கிருந்து செல்வதையும் தடை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவும் குறித்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் படி, மாகாணத்தில் உள்ள 46 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் 34 கால்நடைகளுக்கு இந்நோய் பரவியுள்ளது.

இந்நோயானது மாடுகளின் பால் விளைச்சலில் குறைவை ஏற்படுத்துகிறது, ஆனால் மூன்று வாரங்களில் குணப்படுத்த முடியும் என திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தோல் நோய் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...