வரிசையில் நிற்க தேவையில்லை: கடவுச்சீட்டுக்களை பெற விசேட வேலைத்திடம்

Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள இனி கால் வலிக்கக் காத்திருக்க தேவையில்லை.

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்து, கடவுச்சீட்டுக்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார்.

பொருத்தமான பிரதேச செயலகங்களுக்கு புகைப்படத்துடன் சென்று கைவிரல் அடையாளத்தை வழங்கி, பணத்தை செலுத்தி ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்குள் விரைவாகவும் அல்லது வழமையான சேவையின் கீழ் இரு வாரங்களுக்குப் பின்னர் வீடுகளுக்கே கடவுச்சீட்டுக்களை அனுப்பும் விசேட வேலைத்திட்டத்துக்கு தயாராகி உள்ளோம்.

ஜூன் மாதம் முதல்வாரத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. எனவே, போலியான தரகர்களுக்கு பணத்தை வழங்க வேண்டாம்.

பணத்தைப் பெறும் தரகர்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டுகொண்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...