வலிநிவாரணி மருந்து கொடுப்பது தொடர்பில் அவதானமாக இருக்கவும்!

Date:

தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள தகுதியற்ற வைத்தியர்கள் டெங்கு நோயாளர்களுக்கு பராசிட்டமோலுக்கு பதிலாக வலி நிவாரணி மருந்துகளை வழங்குவதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆலோசகர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தகுதி வாய்ந்த வைத்தியர்கள் சிலர் இதே தவறை செய்வதால் நோயாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது டெங்கு, இன்புளுவன்சா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவி வருவதாகவும், நோயாளிகளின் உடல் வலியைக் குறைக்க மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகளை வழங்கி வருவதாகவும், டெங்கு நோயாளிகளுக்கு வலி நிவாரணிகளை வழங்கி நோயாளிகளின் உயிரையே ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

காய்ச்சலுக்கு மருந்து எடுக்கும் போது பராசிட்டமோலுக்கு பதிலாக வேறு வலி நிவாரணி கொடுத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நோயாளிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...