அபுதாபியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கைப் பெண் உயிரிழப்பு!

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

குறித்த பெண் 2021 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த விடயத்தை ஒருங்கிணைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அபுதாபியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...