இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்… பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் கண்டிப்பு!

Date:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அதேநேரம்  அவரை விடுதலை செய்யவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன.

இதில் 2 வழக்குகளில் பிணையை நீட்டிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரான போது, இராணுவத்தினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இம்ரான் கான் தரப்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், என்.ஏ.பி எனப்படும் தேசிய பொறுப்புடமை அமைப்பு (National Accountability Bureau )) நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டியது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் நீதிமன்றத்தை அணுகும் உரிமை உள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், முன் அனுமதியின்றி இம்ரான் கானை கைது செய்யததாக சாடியது. மேலும் நீதிமன்ற ஊழியர்களும் சட்டவிரோதமாக செயல்பட அனுமதித்ததாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியது.

இம்ரான் கானை ஒரு மணிநேரத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...