இலங்கை அதிகரிக்கும் கொவிட் தொற்று!

Date:

இலங்கையில் நாளாந்தம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமை குறித்து சுகாதார அமைச்சு முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்நாட்களில் நாளாந்தம் குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான கொவிட் நோயாளர்கள் பதிவாகி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் நாளாந்தம் சுமார் 05 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தவிர, கடந்த 03 நாட்களில் கொவிட் தொற்று காரணமாக 02 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நாட்களில் காணப்படும் சுவாச நோய் நிலைமையுடன் இந்த கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்று டொக்டர் சமில் விஜேசிங்க கூறுகிறார்.

இதன்படி,  தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவான பாதிக்கப்படக்கூடிய தரப்பினர் கொவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சு கொவிட்-19 பரிசோதனைகளை முற்றிலும்  கைவிட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பில் இலங்கையும் கவனம் செலுத்த வேண்டுமென அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் தடுப்பூசி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், கொவிட் பரிசோதனைகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய்வியல் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...