கண்டியில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு!

Date:

அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இளம் எழுத்தாளர்களுக்கான முழுநாள் பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று கண்டியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடுப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு சம்மேளனத்தின் தேசிய தலைவர் தேவஹுவ நிஜாமுதீன் தலைமையில் இடம்பெறும்.

கட்டுரை, கவிதை,சிறுகதை, சமூக வலைதளங்கள் முதலானவற்றை பயன்படுத்துவது எவ்வாறு போன்ற விடயங்களை உள்ளடக்கிய இந்த கருத்தரங்கில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களும் பங்கு பற்றமுடியும்.

இதில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு உணவு காகிதாதிகள் வழங்கப்படுவதுடன் பெறுமதி மிக்க சான்றிதழும் வழங்கப்படும்.

பங்குபற்ற விரும்புவோர் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளன தேசிய அமைப்பாளர் ரஷீத் எம். றியாழ் 0777798898 என்ற இலக்கத்துக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியும்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...