கம்பஹா மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்!

Date:

கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்  நிலவுவதாக கம்பஹா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திற்குள் பாரியளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கம்பஹா மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை 36911 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இம் மாதத்தில் 7203 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 22 வீதமான நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 20 வீதமான நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் இந்திக வீரசிங்க கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர், பாடசாலை மாணவர்கள் என வைத்திய நிபுணர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...