கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத சேவை ஜூலையில் ஆரம்பம்

Date:

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா ஓமந்த வரையிலான வடக்கு புகையிரதப் பகுதியானது அதற்குள் முழுமையாக புனரமைக்கப்படும் என்பதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், வடக்கு ரயில்வேயின் இரண்டாம் கட்டம் அனுராதபுரத்திலிருந்து மஹவ வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து வவுனியா ஓமந்த வரையிலான வடக்கு புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு புகையிரத பாதையில் எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் வழமை போன்று புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...