கொழும்பு – காங்கேசன்துறை புகையிரத சேவை ஜூலையில் ஆரம்பம்

Date:

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா ஓமந்த வரையிலான வடக்கு புகையிரதப் பகுதியானது அதற்குள் முழுமையாக புனரமைக்கப்படும் என்பதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், வடக்கு ரயில்வேயின் இரண்டாம் கட்டம் அனுராதபுரத்திலிருந்து மஹவ வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து வவுனியா ஓமந்த வரையிலான வடக்கு புகையிரதத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு புகையிரத பாதையில் எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் வழமை போன்று புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்!

நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப்...

தவணைப் பரீட்சை நடத்தப்படாது: கல்வி அமைச்சு

2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம்...