கோழி இறைச்சி, மீன், தேங்காய் விலை அதிகரிப்பு

Date:

கோழி இறைச்சி, மீன் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஆயிரம் முதல் 1,200 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோவொன்று 1, 500 ரூபா முதல் 1,600 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் சந்தையில் மீனின் விலையும் மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில், கெலவல்லா கிலோவொன்று 1,900 ரூபாவுக்கும், பலயா மீன் கிலோவொன்று 1,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த விலை உயர்விற்கு இணையாக சாதாரண சந்தைகளிலும் மீனின் விலை உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத், கோழி இறைச்சி, மீன், முட்டை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...