கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு: முகக்கவசம் அணியுங்கள்!

Date:

இலங்கையில் கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் கொவிட் தொற்றுக்கு இலக்கான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

30 ஆம் திகதி 7 புதிய கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதுடன், அன்றைய தினம் ஒரு கொவிட் மரணமும் பதிவாகியுள்ளது.

இதன்படி, நேற்றிரவு நிலவரப்படி, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரத்து நூற்று எண்பத்து மூன்றாக (672,183) உயர்வடைந்துள்ளது.

இந்த வெசாக் வாரத்தில் பெரும்பாலானோர் தமது ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதனால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி அனைவரும் முகக்கவசம் அணிவது சிறந்தது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...