சூடானில் மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐ.நா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Date:

சூடானில் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவரிடம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 72 மணிநேர போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதாகக் கூறிய இரு தரப்பினரும் தொடர்ந்தும் போராடி வருகின்ற நிலையில் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

சூடான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போரிடும் இரண்டு தரப்பும் பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், தப்பியோடிய பொதுமக்களை பாதுகாப்பாகக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கார்ட்டூமில், மேலும் மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு தொடர்ந்தும் போராடிவரும் சூழலில் போக்குவரத்துச் செலவு அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறியுள்ளார்.

ஒரே இரவில் தலைகீழாக மாறியுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவது எப்படி என்பதை ஆராய்வதற்காக தான் அப்பகுதிக்குச் செல்வதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...