செர்பியாவில் 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Date:

செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கடந்த 3 ஆம் திகதி 13 வயது பாடசாலை மாணவன் தன் சக மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 8 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த பயங்கர சம்பவம் அரங்கேறிய மறுநாளே தென்பெல்கிரேடில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் செர்பியாவை அதிரவைத்தது.

இந்தநிலையில் செர்பியாவில் உள்ள பாடசாலைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 78 ஆரம்ப பாடசாலைகள், 37 உயர் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அந்நாட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதைதொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...