ஜோ பைடனை கட்டியணைத்துக் கொண்ட மோடி!

Date:

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கட்டியணைத்து ஒருவரையொருவர் வரவேற்றுக்கொண்டனர்.

வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்த உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததன் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஹிரோஷிமாவுக்கு வருகை தந்திருந்தார். மாநாடு நடைபெறும் அரங்கத்துக்கு வந்த ஜோ பைடனை வரவேற்கும் விதமாக அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவரின் கையைப் பிடித்து பேசிவிட்டு பின்னர், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிடம் பைடன் சென்றார்.

அரங்கத்தில் பல நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருந்த நிலையில், ஜோ பைடன், நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...