டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண செயலாளர்களுக்கு பணிப்புரை

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அனைத்து மாகாண பிரதம செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைகளுக்கு இணங்க பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த வாரத்தில் நாடு முழுவதும் 1,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் (49 வீதம்) பதிவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் 21 வீதமும், கொழும்பு மாவட்டத்தில் 18 வீதமும், களுத்துறை மாவட்டத்தில் 7 வீதமும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அவற்றுள் கொழும்பு மாநகர சபைப் பகுதியில் மாத்திரம் 3.4 வீதமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...