ட்விட்டரின் CEO பதவியில் இருந்து விலகும் எலான் மாஸ்க்!

Date:

விரைவில் டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்தும் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என, அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மாஸ்க் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆறு வாரங்களில் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என எலான் மாஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் கூறியுள்ளார்.

புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயற்படவுள்ளதாகவும் மாஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மாஸ்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து டெஸ்லாவின் பங்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய தலைமை செயல் அதிகாரி யார் என்பதை மாஸ்க் வெளிப்படுத்தவில்லை.

எலான் மாஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு கடந்த ஆண்டு கையப்படுத்தியிருந்தார்.

அதன் பின்னர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் ஏற்படுத்தியிருந்தார்.

குறிப்பாக அப்போதைய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்டவர்களை பணியில் இருந்து நீக்கியிருந்தார்.

இதனிடையே, டுவிட்டர் நிறுவனத்திற்கு பெண் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரை நியமித்தால் அது வழக்கமான தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து ஒரு பெரிய விலகலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...