ட்விட்டரின் CEO பதவியில் இருந்து விலகும் எலான் மாஸ்க்!

Date:

விரைவில் டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்தும் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என, அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மாஸ்க் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆறு வாரங்களில் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என எலான் மாஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் கூறியுள்ளார்.

புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக செயற்படவுள்ளதாகவும் மாஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மாஸ்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து டெஸ்லாவின் பங்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய தலைமை செயல் அதிகாரி யார் என்பதை மாஸ்க் வெளிப்படுத்தவில்லை.

எலான் மாஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு கடந்த ஆண்டு கையப்படுத்தியிருந்தார்.

அதன் பின்னர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் ஏற்படுத்தியிருந்தார்.

குறிப்பாக அப்போதைய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்டவர்களை பணியில் இருந்து நீக்கியிருந்தார்.

இதனிடையே, டுவிட்டர் நிறுவனத்திற்கு பெண் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரை நியமித்தால் அது வழக்கமான தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து ஒரு பெரிய விலகலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...