‘தலசீமியாநோயை தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளது’

Date:

தலசீமியா நோயைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதுடன், தலசீமியா நோயாளர்களில் மூன்று வீதமானவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் சிறுவர் மருத்துவப் பிரிவின் ஆலோசகர் சிறுவர் வைத்திய நிபுணர் சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தலசீமியா நோய் பரவும் நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

உலகில் தலசீமியா அதிகமாக உள்ள மற்ற நாடுகள் தங்கள் மக்களிடையே இந்நோய் ஏற்படுவதைத் தடுக்க முடிந்துள்ளது, ஆனால் இலங்கையால் அவ்வாறான சாதகமான நிலையை அடைய முடியவில்லை.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலசீமியா பற்றிய கட்டுக்கதைகளால், பெரும்பாலான மக்கள் திருமணத்தின் போது தங்களுக்கு தலசீமியா இருப்பதை மறைக்கின்றார்கள் என்று அவர் கூறினார்.

இந்த தலசீமியா நோயைத் தடுப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள அனைத்து பொறுப்பாளர்களும் பொதுமக்களும் அலட்சியமாக இருப்பதுடன் இலங்கையை தோல்வியடைந்த நாடாக நிலைநிறுத்துவதில் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றார்.

நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 2,000 தலசீமியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான நோயாளிகள் குருநாகல், ராகம மற்றும் அனுராதபுரம் தலசீமியா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை இரத்தம் ஏற்ற வேண்டும்.

இரத்தமாற்றம் மிகவும் பாதுகாப்பானது, ஆனால் அவை உடலில் அதிகப்படியான இரும்புச் சத்தை உருவாக்கலாம். எனவே அதிகப்படியான இரும்புச்சத்தை நீக்க மருந்து சாப்பிட வேண்டும் என்றார் பேராசிரியர்.

எனவே, நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் திருமணத்திற்கு முன் தலசீமியா நோயின் நிலையைக் கண்டறிய கட்டாயம் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

இதுபோன்ற மருத்துவப் பரிசோதனையை மக்கள் தங்கள் தனிப்பட்ட பொறுப்பாகக் கருத வேண்டும் என்று வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...