‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

Date:

சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து, மேற்குவங்க மாநில அரசு தடை விதித்தது.தமிழ்நாட்டில் படம் வெளியான நிலையில், எதிர்ப்பு எழுந்ததால், திரையரங்க உரிமையாளர்கள் படத்தை திரையிடுவதில்லை என முடிவெடுத்தனர்.

இந்நிலையில், படத்தின் மீதான தடை மற்றும் திரையரங்குகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக படத்தின் தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்குவங்க அரசு பதிலளிக்கவும், தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இதன்படி, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட 19 திரையரங்குகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளது.

படத்துக்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களே வேறு படத்தை திரையிடுவதாகவும்,இதில் அரசின் தலையீடு இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...