நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

Date:

இலங்கையிலிருந்து 500 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எனவும் தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் 86 நோயாளர்களும், கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 48 நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 36 நோயாளர்களும், ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு, கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 218 நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஏனைய 21 மாவட்டங்களில் இருந்து 282 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தொழுநோயைக் குணப்படுத்துவதற்கு மிகவும் வெற்றிகரமான மருத்துவ முறைகள் இருந்தும், சமூகத்தில் இன்னும் நிலவும் தவறான எண்ணங்களால், பல நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை கிளினிக்குகளுக்குச் செல்லாமல் தங்கள் நிலையை மோசமாக்கியுள்ளனர்.

இந்த நோய்க்கு முறையான சிகிச்சை அளித்தால், ஆறு மாதங்களுக்குள் குணமாகி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...