நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும்!

Date:

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் எதிர்வரும் ஜூன் மாதம் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்ட பாரிய பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகளுக்காக மின்பிறப்பாக்கி மூடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏனைய அனல் மின் நிலையங்களுடன் மின் உற்பத்தி நிர்வகிக்கப்படும்.

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கான 30ஆவது கப்பல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, தற்போது இலங்கை மின்சார சபையின் நிலக்கரி தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மின்சார சபை தொழிற்சங்கங்கள் மற்றும் சில ஊடகங்கள் முன்னர் ஊகித்ததைப் போன்று மின்தடைகள் ஏற்படாது என அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...