நுவரெலியா வைத்தியசாலையில் தவறான மருந்தால் 10 பேருக்கு பார்வைக் குறைபாடு!

Date:

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு முழுமையான கண்பார்வை இழப்பு அல்லது பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்பட்டதன் காரணமாக சத்திர சிகிச்சையின் பின்னர் நோயாளர்களின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 05 ஆம் திகதிக்கு பின்னர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளே கண்பார்வை இழந்துள்ளனர் அல்லது பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சத்திரசிகிச்சைக்கு பின்னர் வழங்கப்பட்ட மருந்துகளினால் முழுமையாக கண்பார்வை இழந்தவர்கள் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு பழுதடைந்த மருந்தை இறக்குமதி செய்த நிறுவனத்துக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...