பாராளுமன்றத்தில் தற்போது இரண்டு தங்க திருடர்கள்: எரான் விக்ரமரத்ன

Date:

நாடாளுமன்றத்தில் ஒரு தங்க திருடன் இருப்பதாக தாம் தொடர்ந்தும் கேட்க முடிந்தது எனவும் தற்போது இரண்டு தங்க திருடர்கள் இருக்கின்றனர் என்பதை கேட்க கூடியதாக உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்கள், போதைப் பொருள் முதலாளிகள், கல்,மணல் வியாபாரிகள், தரகு காகங்கள் இருக்கின்றனர் எனக்கூறி 225 பேரையும் விரட்ட வேண்டும் என்ற மக்கள் நிலைப்பாடும் உள்ளது.

இப்படியான நாடாளுமன்றம் சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் தலைவரை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...