புதிய விலை திருத்தங்களுடன் பால்மாவை கொள்வனவு செய்ய முடியும்: இறக்குமதியாளர்கள் சங்கம்

Date:

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் புதிய விலை திருத்தங்களுக்கு அமைய நுகர்வோர் பால்மாவை கொள்வனவு செய்ய முடியும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி பால்மா அடங்கிய கப்பல்கள் இலங்கையை வந்தடையவிருந்தன. எனினும், அந்த கப்பல்கள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தாமதமடைந்துள்ளன.

இதன் காரணமாக தற்போதைய நாட்களில் உற்பத்திகள் இடம்பெறுவதில்லை. எனவே, புதிய பால்மா தொகை நாட்டை வந்தடைந்ததன் பின்னர், அவற்றை நாடளாவிய ரீதியாக புதிய விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நிறையுடைய பால்மா பொதி 200 ரூபாவாலும் 400 கிராம் நிறையுடைய பால்மா பொதி 80 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...