முன்பள்ளி சிறுவர்களுக்கு போஷாக்கு நிறைந்த பிஸ்கட் வழங்கும் வேலைத்திட்டம்

Date:

சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறார்களுக்கு போஷாக்கு நிறைந்த பிஸ்கட் வகையொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பான வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சிறார்களுக்கு தேவையான முட்டை போன்ற சத்தான உணவுகளை குறைந்த விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...