மே 9 வன்முறை சம்பவம்: அமைச்சர்கள் உட்பட 39 பேர் தாக்கல் செய்த மனு கைவிடப்பட்டது!

Date:

கடந்த வருடம் மே 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர்கள் உள்ளிட்ட 39 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (22) மீளப் பெறப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், நடந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தனது கட்சிக்காரர் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, அதில் திருப்தியடைவதாகவும், அதனடிப்படையில் குறித்த மனுவை மீளப் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் கோரினார்.

எனினும், அந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் மரிக்கார் ஆகியோரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் குறித்த மனுவை மீளப்பெற அனுமதி அளித்தது.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர மற்றும் மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 39 பேர் இது தொடர்பான மனுவை முன்வைத்திருந்தனர்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...