யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்!

Date:

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் ஆடிப் பெருவிழாவிற்கு யாழ்ப்பாணம் செல்வா சந்நிதி ஆலயத்தில் இருந்து, பாத யாத்திரை இன்றைய தினம் சனிக்கிழமை ஜெயா வேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமாகியுள்ளது.

செல்வச் சந்நிதி ஆலயத்தில் காலை நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து மோகன் சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாத யாத்திரைக் குழுத் தலைவர் ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டு, பாத யாத்திரை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்ககளில் உள்ள, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7மாவட்டங்களில் உள்ள 98ஆலயங்களைத் தரிசித்து, 46நாட்களில் , 815கிலோமீற்றர் தூரத்தை கடந்தது கதிர்காம ஆலயத்திற்கு இந்த பாதயாத்திரை சென்றடையும்.

இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக இந்த பாத யாத்திரை கருதப்படுகின்றது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...