ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ஓட்டத்திலும் ஜேசன் ராய் 20 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் நிதிஷ் ரானா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 31 பந்தில் 42 ஓட்டத்திலும் வெளியேறினார்.
ஆண்ட்ரூ ரசல் 24 ஓட்டம், சுனில் நரைன் 1 ஓட்டம், ஷர்துல் தாக்குர் 8 ஓட்டத்திலும் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 46 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை சேர்த்தது.
இதையடுத்து, 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 41 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஹெயின்ரிச் கிளாசன் 36 ஓட்டங்களும் அப்துல் சமாத் 21 ஓட்டங்களும், ராகுல் திரிபாதி 20 ஓட்டங்களும், மயங்க் அகர்வால் 18 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 9 ஓட்டங்களும், மார்கோ ஜான்சன் ஒரு ஓட்டமும் எடுத்தனர்.
புவனேஷ்வர் குமார் 5 ஓட்டங்களுடன் , மயங்க் மார்கண்டே ஒரு ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினர்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.