அரசியல்வாதிகள் தாக்குதல் நடத்தியதை அரசாங்கம் முறையாக விசாரிக்கவில்லை: நாட்டை விட்டு வெளியேறுகிறார் ஓமான் முதலீட்டாளர்

Date:

கட்டான – ஹல்பே – கோபியவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து குறித்த தொழிற்சாலையின் நிர்வாக பணிப்பாளர் இலங்கையை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட குழுவொன்று தொழிற்சாலை வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கிய பின்னர் அவர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் ஓமன் நாட்டவரான நிர்வாக பணிப்பாளரையும் தாக்கியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் செயற்பட்டதாகக் கூறப்படும் குறிந்த இனந்தெரியாத கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற ஓமானின் ஆடைத் தொடரின் சகோதர நிறுவனமான அவரது ஆடைத் தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஓமானிய வர்த்தகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகடெமான்றுதெரிவித்துள்ளது.

தாக்குதல் தொடர்பில் இதுவரை நியாயமான விசாரணையை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் தொழிற்சாலையை மூடிவிட்டு இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என ஓமானிய தொழிற்சாலை உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...