அலி சப்ரி ரஹீம் பெருந்தொகையான தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது: அரசியல் தலையீடு இன்றி விசாரணைகளை நடத்துமாறு ஹர்சன ராஜகருண கோரிக்கை

Date:

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது இது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண கருத்து வெளியிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் எமது புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் மூன்று கிலோ கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுளளதாக கூறப்படுகிறது.

இப்படியான சம்பவங்களின் போதே எமது நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேர் மீதும் குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தரப்பிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என ஹர்சன ராஜகருண கூறியுள்ளார்.

 

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...