இன்றும் பலத்த மழை: வானிலை முன்னறிவிப்பு

Date:

மேல் மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் இன்று (01) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும்.

இதேவேளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம பிரதேச செயலகம், பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...