கம்பளையில் காணாமல் போன பெண்ணை கொன்று புதைத்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் !

Date:

கம்பளை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல் போயிருந்த யுவதியை, தான் கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ
தெரிவித்துள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் வசித்துவந்த 22 வயதுடைய பாத்திமா முனவ்வரா என்ற குறித்த யுவதி தனது பணியிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் 24 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸாரால் கைதுசெய்திருந்தனர்.

குறித்த சந்தேகநபர் யுவதியை ​​காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொன்று புதைத்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சடலத்தை புதைத்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்த போதிலும், சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...