காஷ்மீரில் G-20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு!

Date:

2023 ஆம் ஆண்டு G20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம்பெற்று வருகின்றது.

அதன்படி, G20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.

டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்நிலையில், G20 மாநாட்டில் சுற்றுலாதுறை தரப்பிலானா மாநாடு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் நாளை மறுதினம் ஆரம்பமாகி மூன்று நாட்கள் (22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் G20 நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் G20 அமைப்பில் உறுப்பினராக உள்ள சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

பிரச்சினைக்குரிய பகுதியில் மாநாடு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ள சீனா இந்த மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில் எந்த விதமான சர்ச்சைக்குரிய பகுதியிலும் G20 மாநாட்டை நடத்துவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற மாநடுகளில் சீனா பங்கேற்காது, என தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நடைபெறும் G20 மாநாட்டில் சீனா பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன நிலையில் துருக்கியும் காஷ்மீர் G20 மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், சவுதி அரேபியாவும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...