‘சிறுநீரக நோயாளர்கள், வயோதிபர்களுக்கான உதவிகள் தொடரும் ‘

Date:

சிறுநீரக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான நிதியுதவி தொடரும் என இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,  அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது உதவிகள் எவ்வித குறைப்புமின்றி தொடரும் என இராஜாங்க அமைச்சர்   தெரிவித்துள்ளார்.

பொது வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் பயனாளிகள் போன்ற பிரிவுகளின் கீழ் நிதி உதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 520,000 க்கும் அதிகமான மக்களுக்கு வழமைப் போன்று அரசாங்கம் தொடர்ந்து நிதி உதவி வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...