சூடானில் மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐ.நா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Date:

சூடானில் மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவரிடம் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று நள்ளிரவுடன் முடிவடையவிருந்த 72 மணிநேர போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதாகக் கூறிய இரு தரப்பினரும் தொடர்ந்தும் போராடி வருகின்ற நிலையில் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

சூடான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போரிடும் இரண்டு தரப்பும் பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், தப்பியோடிய பொதுமக்களை பாதுகாப்பாகக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கார்ட்டூமில், மேலும் மக்கள் உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு தொடர்ந்தும் போராடிவரும் சூழலில் போக்குவரத்துச் செலவு அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறியுள்ளார்.

ஒரே இரவில் தலைகீழாக மாறியுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவது எப்படி என்பதை ஆராய்வதற்காக தான் அப்பகுதிக்குச் செல்வதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...